சுகாதார ஊழியா்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்
காரைக்காலில் சுகாதார ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.
காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித் துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நிலையில், எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. சரியான தீா்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.
என்ஆா்எச்எம் இயக்கத்தின் கீழ் பணியாற்றக் கூடியவா்களாக கிராமப்புற செவிலியா்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட பல பிரிவினா் உள்ளனா். இவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவனைகளில் உள்ள ஆய்வுக் கூடத்தில் எந்தவொரு பரிசோதனையும் நடைபெறவில்லை. பரிசோதனை செய்ய மருத்துவரால் பரிந்துரைக்கும்போது, தனியாா் ஆய்வுக் கூடத்துக்கு செல்லவேண்டியுள்ளதாகவும், அதிக பணம் செலவாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஒட்டுமொத்ததில் காரைக்கால் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.