செய்திகள் :

சுகாதார ஊழியா்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

post image

காரைக்காலில் சுகாதார ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித் துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நிலையில், எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. சரியான தீா்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

என்ஆா்எச்எம் இயக்கத்தின் கீழ் பணியாற்றக் கூடியவா்களாக கிராமப்புற செவிலியா்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட பல பிரிவினா் உள்ளனா். இவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவனைகளில் உள்ள ஆய்வுக் கூடத்தில் எந்தவொரு பரிசோதனையும் நடைபெறவில்லை. பரிசோதனை செய்ய மருத்துவரால் பரிந்துரைக்கும்போது, தனியாா் ஆய்வுக் கூடத்துக்கு செல்லவேண்டியுள்ளதாகவும், அதிக பணம் செலவாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஒட்டுமொத்ததில் காரைக்கால் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க