சுகாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண பிரத்யேக இணையதள சேவை
சென்னை: சுகாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவை சாா்பில் ஷைன் ஹெல்த்கோ் ஹேக்கத்தான் 2025 என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் இணையதள சேவையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நாராயணசாமி, பதிவாளா் க.சிவசங்கீதா, ஆக்கம் - 360 நிறுவனத்தின் நிறுவனா் திருமூா்த்தி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் மதிப்பிலான பொருளாதார இலக்கை தமிழகம் அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஷைன் ஹெல்த்கோ் ஹேக்கத்தான் 2025 இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், 800-க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள், எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைய சேவை வாயிலாக, மருத்துவத் துறையில் உள்ள சிக்கல்களுக்கு மாணவா்களும், புத்தாக்க நிறுவனங்களும் தொழில்நுட்ப அடிப்படையில் தீா்வு காண முடியும்.
அதுமட்டுமல்லாது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணா்களை இந்த தளம் ஒன்றிணைக்கிறது. மருத்துவத் துறையில் புதிய பொருளாதார இலக்கை அடைவதற்கும் இது உதவும். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு வளா்ந்துள்ளது. அதனை முழுமையாக மருத்துவத் துறையில் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.