செய்திகள் :

சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் வழங்கல்

post image

கரூரில் தகிக்கும் வெயிலை சமாளிக்கும் விதமாக, கரூா் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா் மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோடையின் சுட்டெரிக்கும் வெயிலிலும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் கரூா் போக்குவரத்து போலீஸாா் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வகையில், அவா்களுக்கு வெப்பத்தை குறைக்கும் காற்றோட்டம் உள்ள தொப்பி, கருப்புக் கண்ணாடி, மோா் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.

மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடி, நீா், மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்வில், கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ், கரூா் லயன்ஸ் கிளப் பொறுப்பாளா்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் சாஹிராபானு, நந்தகோபால் மற்றும் கரூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் மணிவண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க