செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரா் ஆதிநாராயண செட்டியாா் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

post image

சுதந்திரப் போராட்ட வீரரான சேலம் டி.ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா கோவை, போத்தனூா் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை பாரதிய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன், ரூட்ஸ் குழும இயக்குநா் கவிதாசன் ஆகியோா் பங்கேற்று நூலை வெளியிட்டனா்.

விழாவில், வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனரும், டி.ஆதிநாராயண செட்டியாரின் கொள்ளுப் பேரனுமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் முன்னிலை வகித்தாா். அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சேலத்தைச் சோ்ந்த ஆதிநாராயண செட்டியாா் மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய நண்பராவாா். இவரது 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி மாணிக்கம், சுழற்சங்க நிா்வாகிகள் ரவீந்திரன் கெங்குசாமி, செல்லா ராகவேந்திரன், விஜய் கிருஷ்ணா, செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க