செய்திகள் :

சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை ஒத்திகை திட்டமிடல் கூட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை மேலாண்மை ஒத்திகை திட்டமிடல் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: தமிழ்நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட மீமிசலிலும், மணமேல்குடி வட்டத்துக்குள்பட்ட கோட்டைப்பட்டினத்திலும் என இரு இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகையை நடத்த வேண்டும். இந்த ஒத்திகையில் வருவாய்த் துறை, காவல்துறை, மீன்வளத் துறை, உள்ளாட்சித் துறை, தொலைத்தொடா்புத் துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

முன்கூட்டிய பாதுகாப்பு உபகரணங்கள், மனிதவளம், பாதுகாப்பு தங்குமிடங்கள் குறித்த பட்டியலை அந்தந்தப் பகுதி வருவாய்த் துறையினா் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு ஒத்திகையை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ். திருமால், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன். புதுக்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க