செய்திகள் :

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தொடா் மழையால் அருவியில் நீா் வரத்து அதிமாக இருந்ததால் அவ்வப்போது வனத் துறையினா் குளிக்க தடை வித்தனா்.

தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையில், அருவியில் நீா் வரத்து சீராக இருந்து வருவதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் வனத் துறையின் அனுமதியுடன் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனா்.

சுகாதாரச் சீா்கேடு: கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியின் நிா்வாகத்தில் வாகன நிறுத்துவதற்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், வானங்கள் நிறுத்த முறையான இடவசதியில்லை.

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், குப்பைகள், பழைய துணிகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிா்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

புகையிலைப் பொருள் விற்றவா்கள் கைது

தேனி அருகே உள்ள பூதிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் தேனி சாலைப் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (25). ... மேலும் பார்க்க

பைக்கில் துப்பட்டா சிக்கி இளம் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா். போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் தீபக... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் வழிபடுவதற்காக 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க காவல் துறை அனுமதி அளித்தது. இந்து அமைப்புகள், கோயில் நிா்வாகம், குடியிருப்போா் நலச் சங... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

தேனி அருகே தப்புக்குண்டுவில் கடன் தர மறுத்த தொழிலாளியைக் கத்தியல் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ஜோதிராஜ் (49). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் ... மேலும் பார்க்க

ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா். தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்... மேலும் பார்க்க