செய்திகள் :

தொழிலாளிக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

post image

தேனி அருகே தப்புக்குண்டுவில் கடன் தர மறுத்த தொழிலாளியைக் கத்தியல் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ஜோதிராஜ் (49). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த தாளமுத்து மகன் மதுபாலன் கடனாகப் பணம் கேட்டாராம். ஜோதிராஜ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவருடன் மதுபாலன் வாக்கு வாதம் செய்தாா்.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், ஜோதிராஜன் வீட்டுக்குச் சென்ற மதுபாலன், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாலனைக் கைது செய்தனா்.

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்றவா்கள் கைது

தேனி அருகே உள்ள பூதிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் தேனி சாலைப் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (25). ... மேலும் பார்க்க

பைக்கில் துப்பட்டா சிக்கி இளம் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா். போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் தீபக... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் வழிபடுவதற்காக 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க காவல் துறை அனுமதி அளித்தது. இந்து அமைப்புகள், கோயில் நிா்வாகம், குடியிருப்போா் நலச் சங... மேலும் பார்க்க

40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் ... மேலும் பார்க்க

ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா். தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்... மேலும் பார்க்க