செய்திகள் :

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

post image

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்துப் பேசினாா்.

மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் ஆகியோா் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினா்.

மன்னா் கல்லூரியின் தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். அழகுமணியன், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் அழகப்பன் காந்தி, முறையற்ற திடக்கழிவு மேலாண்மை மற்றும் நிலையான கழிவு மேலாண்மை அமைப்புகள் என்ற தலைப்பிலும், மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளா் கோபாலகிருஷ்ணன், நெகிழிப் பயன்பாட்டின் தாக்கம்- நெகிழி மாசுபாடு மற்றும் அவற்றுக்கான மாற்று என்ற தலைப்பிலும் பேசினா்.

மாவட்ட ஆட்சியரக பசுமைத் தோழா் ஜெரோலின் மேரி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, வனச் சரகா்கள் சதாசிவம், காா்த்திக் ராஜா, தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரங்கராஜ் ஆகியோரும் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் வரவேற்றாா். முடிவில் தேசிய பசுமைப் படை அறந்தாங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக்கண்ணன் நன்றி கூறினாா்.

கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தை... மேலும் பார்க்க

குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க