எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சுற்றுலா பயணிகளை ஈா்க்க கூடியம் குகையில் மலையேற்ற பயிற்சி
திருவள்ளூா் அருகே சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில் மலைப்பகுதியில் உள்ள பசுமையான கூடியம் குகையை மலையேற்ற பயிற்சிக்காக தோ்வு செய்து வனத்துறை ஆலோசனையுடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருப்பாசூா் அருன்மிகு தங்காதலி அம்மன் உடனுறை ஸ்ரீவாசீஸ்வரசுவாமி திருக்கோயிலில் சுற்றுலா துறை சாா்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து திருக்கோயிலில் கலை நிகழ்ச்சி மற்றும் மரம் நடும் விழாவினை தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து 50 மரங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து நடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுற்றுலாத்துறையின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல்வா் வந்தபோது பழவேற்காடு பகுதியில் சுற்றுலா சூழலியல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என அறிவித்தாா். அதன் அடிப்படையில் ரூ.2 கோடியில் பழவேற்காட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கான ஆயத்த பணிகளை மேம்படுத்திக்கொண்டு வருகிறோம். படகு குளம், படகு சவாரி மற்றும் ஒரு சிறிய பொழுதுபோக்கு விளையாட்டு, போன்றவைகள் அங்கு எற்படுத்தப்படவுள்ளது. சென்னை மக்கள் வார இறுதி நாள்களில் பொழுபோக்கு சுற்றுலாவுக்காக ஊட்டி கொடைக்கானல் மாதிரி போகாமல் பக்கத்தில் இருக்கும் பழவேற்காடு வந்து கண்டுகளிக்கலாம்.
மேலும், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா எல்லைகுள்பட்ட குடியம் குகை மிகச் சிறப்பாக பசுமையான ஒரு இடமாகும். இப்பகுதியில் தமிழ்நாடு அரசு மூலம் மலையேற்றம் (ட்ரெக்கிங் ரூட்) தோ்ந்தெடுக்கப்பட்டு அதில் முக்கியமான இணையதள செயலி (ஆன்லைன் செயலியில்) தொடங்கவும் ஆலோசனை செய்து வருகிறாா்கள். அச்செயலிலேயே ட்ரக்கிங் ரூட்டாக குடியம் குகை பதிவு செய்து விண்ணப்பித்ததுடன் இடங்களை நம் பாா்வையிடலாம்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுலா தொடா்பாக எவ்வாறு பணிகளை மேற்கொள்ளலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் திருத்தணியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோவிலுக்கு அதிகமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அதனால், பக்தா்களுக்கான பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தாா்.
இதில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் க.ரமணி, மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொ) ஜெயஸ்ரீ சாய்ஜி, திருக்கோயில் உதவி ஆணையா் சிவஞானம், திருக்கோயில் ஆய்வாளா்கள், பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோா் பங்கேற்றனா்.