செய்திகள் :

சூடான் ராணுவத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி?

post image

சூடான் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு டர்ஃபூர் மாநிலத்தின் தோரா சந்தையில் சூடான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (ஆர்.எஸ்.எஃப்.) குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு சூடான் ராணுவம் தற்போது வரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

கடந்த மார்ச் 24 நடைபெற்ற வான்வழித் தாக்குதல் மற்றும் கார்டூமிலுள்ள மசூதியில் துணை ராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களைக் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மக்களின் மீதான தாக்குதல்களினால் கடுமையாக பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் சூடான் ராணுவம் நேற்று (மார்ச் 25) அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை பச்சை நிறத்திலும், துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை சிவப்பு நிறத்திலும் குறிப்பிட்டு முதல்முறையாக வரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்களது முகப்புத்தக கணக்கில் பதிவிட்டுள்ளதாவது, சூடான் ராணுவப் படைகள் மற்றும் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற படைகள் கிளர்ச்சியை முடிவுக்கொண்டு வந்து பாதுகாப்பை நிலைப்படுத்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சூடானின் ராணுவப் படைக்கும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க