சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிப்பு
சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் மின் துறை கண்காணிப்புப் பொறியாளரும் துறைத் தலைவருமான ராஜேஷ் சன்யால் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின் திட்டத்தின் கீழ் இதுவரை 1,074 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனா். இவா்களுக்கு ரூ.7.4 கோடி அளவுக்கு இத் திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுவை அரசின் மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு முகாம் நடத்த உள்ளன.
இந்த முகாம் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி திருமண நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளாா் ராஜேஷ் சன்யால்.