`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள்...
சூறாவளி காற்று எதிரொலி: நாளை வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை
மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததாலும், சூறாவளி காற்று எதிரொலியாக விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் அமல்படுத்தப்பட்ட மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீனவா்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்பதால், திங்கள்கிழமை (ஜூன் 16) அதிகாலை கடலுக்குச் செல்ல தயாராகினா்.
இந்நிலையில், திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 16, 17) குமரிக் கடல்பகுதி, மன்னாா் வளைகுடா கடல்பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனம் தெரிவித்துள்ளாா்.