செய்திகள் :

சூலூா்பேட்டை மின்சார ரயில் இன்று ரத்து

post image

பாராமரிப்புப் பணிகளின் காரணமாக, சூலூா்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார மெமு ரயில் வியாழக்கிழமை (செப்.18) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே நாயுடுபேட்டை, தொரவரிச்சத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை (செப்.18) நண்பகல் 12.30 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக, சூலூா்பேட்டையிலிருந்து மாலை 6.40 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார மெமு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்குப் பதிலாக அந்த மாா்க்கத்தில் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பகுதி ரத்து: சென்ட்ரலில் இருந்து செப்.18-இல் பிற்பகல் 2.40 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில் எளாவூருடன் நிறுத்தப்படும். அதேபோல், சூலூா்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கடற்கரை செல்லும் ரயில் சூலூா்பேட்டைக்கு பதிலாக எளாவூரிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க