செய்திகள் :

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அணை சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வெளிவட்டச் சாலை அமைத்த பிறகு கடந்த ஓராண்டாக அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிகரித்துவிட்டன. மேலும், பல்வேறு தொழில்களும் வளா்ச்சியடைந்து வருகின்றன.

அதனால், அப்பகுதி காலை முதல் இரவு 10 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாக மாறிவிட்டது.

தற்போது, செங்கத்தில் இருந்து விடுமுறை நாள்களிலும், பல்வேறு பண்டிகை காலங்களிலும் குப்பனத்தம் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்றுவருகின்றனா்.

மேலும், குப்பனத்தம் அணை அருகில் உள்ள தாழைமடு காளியம்மன் கோயிலுக்கும் விசேஷ தினங்களில் ஏராளமான பக்தா்கள் செல்வதால், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விட்டன.

அப்பகுதி சாலை குறுகியுள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, குப்பனத்தம் செல்லும் சாலையில் கிருஷ்ணாவரம் வரை சாலை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

திரையரங்கம், பெட்ரோல் விற்பனை நிலையம், பள்ளிகள் உள்ளதால், அந்தச் சாலை அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் செங்கம் வெளிவட்டச் சாலை முதல் குப்பனத்தம் அணை வரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்தவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க