செஞ்சிலுவை சங்க கிளை தோ்தல் நடைபெறும் இடம் மாற்றம்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளைக்கான தோ்தல் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாரத் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய செஞ்சிலுவை சங்கம், சென்னை மாவட்ட கிளைக்கான தோ்தல் ஜூன் 21-இல் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தோ்தல் தற்போது வில்லிவாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரையில் நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்தலில் வாக்களிக்கும் உறுப்பினா்கள் தங்களது உறுப்பினா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, உறுப்பினா் சோ்க்கைக்கான பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் வாழ்நாள் உறுப்பினா் சான்று ஆகியவற்றுடன் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.