செய்திகள் :

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

post image

இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமான உதயம் என்எச்4 வெற்றிப்படமானது.

தொடர்ந்து, நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தார். சில திரைப்படங்கள் லாபகரமாக அமைந்தது.

ஆனால், இறுதியாக வெற்றிமாறன் தயாரித்த மனுசி, பேட் கேர்ள் ஆகிய திரைப்படங்கள் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது. இதில், பேட் கேர்ள் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “ஒரு தயாரிப்பாளராக இருந்தால் படம் பேசவரும் கருத்துகளுக்கான எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டும். இது படத்தின் வணிகத்தையும் பாதிக்கும் என்பதால் தயாரிப்பாளராக இருப்பது அழுத்தம் தரக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே, மனுசி நீதிமன்ற சிக்கலைச் சந்தித்தது. இனி என்ன பிரச்னை வரப்போகிறது எனத் தெரியவில்லை. பேட் கேர்ள் திரைப்படமும் தணிக்கைக்குச் சென்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்கிற சான்றிதழைப் பெற்றுள்ளது.

எங்களைப் போன்றவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் என்பதால் கடன் பெற்றுத்தான் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம். இது சவாலாக இருக்கிறது. இதனால், பேட் கேர்ள் திரைப்படம்தான் என் கடைசி தயாரிப்பு என்கிற முடிவை எடுத்திருக்கிறேன். இனிமேல், கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி திரைப்படங்களைத் தயாரிக்காது. கடையை இழுத்து மூடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றி மாறனின் இப்பேச்சு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்தால், அதற்கு எதிரானவர்களால் படமும் அதன் வணிகமும் பாதிக்கப்பட்டு வெற்றி மாறன் போன்றவர்களையே தயாரிப்பிலிருந்து விலகச் செய்துள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

director vetri maaran plan to stop producing films under his grassroot film company production

சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

திரையரங்குகளில் இந்த வாரம் 5 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(செப். 5) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.மதராஸிஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி... மேலும் பார்க்க

40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!

லோகா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார். மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியர்!

யுஎஸ் ஓபனில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பாம்ப்ரி முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவில் ந... மேலும் பார்க்க

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

தஞ்சாவூரில் 61 அடி உயரத்திலான அருள்மிகு பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தஞ்சாவூர் விளார் சாலையில் 61 அடி உயரத்தில் அருள்மிகு ... மேலும் பார்க்க

அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

டென்னிஸ் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர் யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் லொரன்ஸோ முசெட்டியை வீழ்த்தி அரியிறுதிக்கு முன்னேறினார். சாதனை வெற்றிஅமெரிக்காவில... மேலும் பார்க்க

பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!

கன்னடத்தில் வெற்றிப்படமான சூ ஃப்ரம் சோ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான கன்னட படமான சூ ஃப்ரம் சோ திரைப்படம் கடந்த ஜூலை 25 ... மேலும் பார்க்க