செய்திகள் :

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

post image

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல் மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய நிதி வரத்து ஆகியவற்றால் மும்பை பங்குச் சந்தை, குறியீடான சென்செக்ஸ் உயர்ந்தது முடிந்தது.

இன்றை காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 935.69 புள்ளிகள் உயர்ந்து 81,177.93 புள்ளிகளாக இருந்தது. வர்த்த நேர முடிவில் ஏற்ற-இறக்கங்கள் மத்தியில், சென்செக்ஸ் குறியீடு 259.75 புள்ளிகள் உயர்ந்து 80,501.99 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.50 புள்ளிகள் உயர்ந்து 24,346.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மாருதி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் நெஸ்லே, என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்து முடிந்தன.

துறை வாரியாக மீடியா, எனர்ஜி, ஐடி, எண்ணெய் & எரிவாயு 0.3 முதல் 0.7 சதவிகிதம் உயர்ந்தும் மின்சாரம், மெட்டல், டெலிகாம், பார்மா, ரியாலிட்டி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 0.5 முதல் 2 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய குறியீடுகள் லாபங்களுடன் வர்த்தகமான நிலையில், சீனா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்வதாகக் கூறியதையடுத்து ஆசிய குறியீடுகள் உயர்ந்தன. இது கட்டண பதட்டங்கள் தணிக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பங்குகள் சார்ந்த நடவடிக்கையில், அதானி போர்ட்ஸ் 4-வது காலாண்டு லாபம் 4% அதிகரித்ததால் பங்கின் விலை 4% அதிகரித்ததும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் தொகுதி ஒப்பந்தத்தில் 1.73 கோடி பங்குகள் கைமாறியதையடுத்து 4 சதவிகிதம் உயர்ந்தது.

நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 4-வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 65% உயர்ந்ததால் அதன் பங்குகள் 5.5 சதவிகிதமும், ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் மார்ச் காலாண்டு நிகர லாபம் 46 சதவிகிதம் உயர்ந்து ரூ.113.4 கோடியாக உயர்ந்தது.

இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் Q4 லாபம் சரிந்ததால், அதன் பங்குகள் 7 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.

காட்ஃப்ரே பிலிப்ஸ், யுபிஎல், கோரமண்டல் இன்டர்நேஷனல், நவீன் ஃப்ளோரின், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஹெக்ஸாகாம், மேக்ஸ் பைனான்சியல், மசகான் டாக் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடும், டோக்கியோவின் நிக்கேய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள், அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.82 சதவிகிதம் குறைந்து 61.62 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ரூ.50.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.வங்கிகளில் சைபர் ப... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.அதன் துணை நிறுவனமான இன்போசிஸ், ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்து மற்றும் வலுவான உள்நாட்டு தரவுகளால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இன்று இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிந்தது.ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வ... மேலும் பார்க்க

போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள்!

போகோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய மொபைல்போன் முதல் டிவோலியின் சாங்க் புக் வரை இந்த வாரம் வெளியான புதிய கேட்ஜெட்கள் பற்றி இங்கு காணலாம்.டேக் ஹியூயர் சன் கிளாஸஸ் (Tag Heuer Sunglasses)சுவிஸை தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரூ.17 கோடியில் கைக்கடிகாரம்.. இந்த வார கேட்ஜெட்களில் ரிச்சர்ட் மில்லி!

ரிச்சர்ட் மில்லி நிறுவனம் சுமார் ரூ.17 கோடியிலான கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்துள்ளது. ரிச்சர்ட் மில்லி - ஆர்எம்75-01 (Richard Mille - RM75-01)ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் ஆர்எம்75-01 என்ற புதிய வகை கைக... மேலும் பார்க்க