செய்திகள் :

சென்செக்ஸ் 760 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; எஃப்எம்சிஜி, பவர் பங்குகள் ஏற்றம்!

post image

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

டாப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கொள்முதல் செய்ததால் உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை.

வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 953.18 புள்ளிகள் உயர்ந்து 81,905.17 ஆக இருந்தது. வர்த்தகத்தின் சீரான தொடக்கத்திற்குப் பிறகு, 30 பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச் சந்தை முடிவில் 769.09 புள்ளிகள் உயர்ந்து 81,721.08 புள்ளிகளாகவும் நிஃப்டி 243.45 புள்ளிகள் உயர்ந்து 24,853.15 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எடர்னல், பவர் கிரிட், ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் சன் பார்மா கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்தது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 19 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக அறிவித்ததையடுத்து சன் பார்மா பங்கு சரிந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் மத்திய வர்த்தகத்தில் உயர்ந்து காணப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) இரவு வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் ஏற்ற-இறக்கத்தில் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.23 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 64.29 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.5,045.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க:

அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வரவு, பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணங்களால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு நவம்பர் 2022க்குப் பிறகு ஒரே நாளி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!

நேற்று சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை இன்று(மே 23) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,897 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், செ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 411 புள்ளி... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவு! 1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,323.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகல் 12.55 மணி நிலவரப்ப... மேலும் பார்க்க