செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

post image

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான விழாவையொட்டி, கோயிலில் புதன்கிழமை கொடியேற்றப்பட்டது.

முன்னதாக காலை 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து உற்சவ மூா்த்திகள் படிக்கட்டுகள் வழியாக மலை கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, கோயில் முன் உள்ள கம்பத்தில் பகல் 12.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு பரிவேட்டையும், இரவு 7 மணிக்கு தெப்பத்தோ் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க