செய்திகள் :

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

post image

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு வந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி செய்தவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்தவரை ஐபிஓவில் முதலீடு செய்ய சொல்லி தூண்டியும், இணையதளம் மூலம் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று மோசடி நபர்கள் கூறிய வார்த்தைகளை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் பணத்தினை முதலீடு செய்து இழந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மோசடி குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து போலி வங்கி கணக்குகளை துவங்கி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து பணத்தை பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சேன் ஆகிய 4 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கமிஷனாக பெறப்பட்ட ரூபாய் 4,38,000/- பணம் மற்றும் மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை புழல் மத்திய சிறையில் புழலில் அடைக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வணிக நோக்கத்திற்காக தற்காலிகமாக வாடகை கட்டடங்களில் தங்கி வங்கிகளில் பல நடப்புக் கணக்குகளை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், ஏஜெண்டுகள் மூலம் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கும் பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குழு செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் மூலம் குறிவைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Summary

Police have arrested 4 people involved in an online trading scam in Chennai.

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

போலீஸ் விசாரணையில் திமுகவினருக்கு ராஜமரியாதை- அண்ணாமலை

போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத... மேலும் பார்க்க

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தி... மேலும் பார்க்க

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி... மேலும் பார்க்க

காவல்துறையை நிர்வகிக்கத் தெரியாத முதல்வர்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமு... மேலும் பார்க்க

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள... மேலும் பார்க்க