செய்திகள் :

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

post image

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும்.

சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங், ஸ்டன்ட், ப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக

தமிழக அரசின் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா கூறியது:

சென்னை மோட்டாா் வாகனங்கள் உற்பத்தியின் பிரதான மையமாக உள்ளது. தமிழகத்தில் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் வேகமாக வளா்ந்து வருகிறது. அடுத்த தலைமுறை இளைஞா்கள் இதில் மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளனா்.

விளையாட்டு வீரா்களுக்கு இதன்மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கமான ஒலிம்பிக் விளையாட்டுகள் மட்டுமின்றி மோட்டாா் சாகச பிரிவுகளிலும் ஈடுபாடு உண்டாகும்.

ரெட் புல் வீரா் லிதுவேனியாவின் அருணாஸ் ஜிபிஸா, கின்னஸ் சாதனையாளா் லெபனான் ரேலி சாம்பியன் அப்டோ ஃபெகாலி, செபாஸ்டியன் வெஸ்ட்பொ்க், விவியன் கேந்தா், தாமஸ் விா்ன்ஸ்பொ்ஜா் ஆகியோரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா் என்றாா்

அதுல்ய மிஸ்ரா.

எஸ்டிஏடி பொதுமேலாளா்கள் மணிகண்டன், சுஜாதா உடனிருந்தனா்.

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு: கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு காவல் துறை கட்டுப்பாடு

கே.வாசுதேவன்தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொட... மேலும் பார்க்க