குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
சென்னையில் நாளை தொடங்கும் மாநில குத்துச்சண்டை போட்டி
மாநில அளவிலான ‘ஆதித்த கரிகாலன் கோப்பை’ குத்துச்சண்டை போட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
கோபாலபுரத்தில் உள்ள கலைஞா் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியை, ஆா்ஆா் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது. சப்-ஜூனியா், ஜூனியா், யூத், எலைட் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க இதுவரை சுமாா் 500 போ் வரை பதிவு செய்திருப்பதாக போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். முன்னாள் ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரும், இந்நாள் நடுவருமான தேவராஜன், தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத் தலைவா் பொன் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக இதில் பங்கேற்கின்றனா்.
போட்டி தொடா்பான தகவலுக்கு: செந்தில் - 9080554901