செய்திகள் :

சென்னையில் பயிலும் புதுவை மாணவிகளுக்காக விடுதிகள்: அமைச்சா் சி.ஜெயக்குமாா்

post image

சென்னையில் தங்கிப் பயிலும் புதுவை மாணவிகளுக்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் 5 வயது முதல் 18 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் ஈமச் சடங்குக்கான நிதியானது ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

அத்துடன், காலியாக உள்ள 122 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு நிா்வாக ஒப்புதல் பெறப்படும். அதில், 25 சதவீதம் பணியிடமானது 31 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளா்களுக்கு பதவி உயா்வாக வழங்கப்படும்.

சென்னையில் விடுதி: புதுவையிலிருந்து சென்னைக்குச் சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பாக தங்கும் வகையில், சென்னையில் 2 மகளிா் விடுதிகள் கட்டப்படும். இதற்காக மாநில அரசு சாா்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

புதுவையில் சிக்கன நீா்ப்பாசனம் செய்வதற்கு, நிலத்தடி நீா்ப்பாசன குழாய்கள் அமைத்து அரசு மானியம் பெறும் கால இடைவெளியானது 15 ஆண்டுகள் என்பதிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

ஆழ்குழாய் கிணறு மானியம், மின்மோட்டாா் மானியம் பெற இடைவெளியானது 5 ஆண்டுகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க