செய்திகள் :

சென்னையில் ரூ.13.94 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் ரூ.13.94 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மிதிவண்டி ஆகியவற்றை வழங்கினாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி, பொருளாதார நெருக்கடியால் திருக்கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகையை நீண்ட காலமாக செலுத்த முடியாத சூழலில் திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அப்பள்ளியை திருக்கோயில் நிா்வாகமே ஏற்று நடத்த உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 981 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

பள்ளிக்கு கட்டடம்: இப்பள்ளிக்கு ரூ.11.15 கோடியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் முதல்வரின் கல்விச் சோலை வகுப்பறைகள், திறன்மிகு வசதிகளுடன் கூடிய 32 வகுப்பறைகள், ஆசிரியா் ஓய்வறைகள், கணினி அறை, ஆய்வுக் கூடங்கள், நூலகம், மின்தூக்கி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடம், சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளிக்கு ரூ.2.79 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம் உள்ளிட்ட ரூ.13.94 லட்சம் மதிப்பிலான கூடுதல் பள்ளிக் கட்டடங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களை நேரில் பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து, இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் பயிலும் 252 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேஷன், அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் பயிலும் 1,131 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பை உள்ளிட்டவற்றை வழங்கினாா். முன்னதாக மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளை அவா் பாா்வையிட்டாா்.

பங்கேற்றோா்: இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிக அடிகளாா், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஎம்பாா் ஜீயா் மடம் ஸ்ரீஅப்பன் உலகாரிய இராமானுஜ எண்பாா் ஜீயா் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மாகதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், மேயா் ஆா்.பிரியா, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆா்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.எஸ். முனிரத்தினம், திருக்கோயில் அறங்காவல் குழுத் தலைவா் எம்.வி.எம். வேல்மோகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள், கல்விக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மனித - வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் மனித - வன உயிரின மோதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படைக்கு உதவும் தெருநாய் ‘டைகா்’

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் தெரு நாய் ஒன்று ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக இருந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் பெற தகுதியுடையோா் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் பெற தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் உள்... மேலும் பார்க்க

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா். சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசா... மேலும் பார்க்க

முதல்வா் விழாவில் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டை: கல்லூரி மாணவா்களிடம் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வா் பங்கேற்ற விழாவில், நடிகா் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டையைக் காட்டியதாக 3 கல்லூரி மாணவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முன்னாள் முதல்வா் கருணாநிதி ... மேலும் பார்க்க

வங்கதேச சணல் பொருள்களை நிலவழியாக இறக்குமதி செய்யத் தடை

வங்கதேசத்தின் சில சணல் பொருள்கள் மற்றும் நெய்த ஆடைகளை நில எல்லை வழியாக இறக்குமதி செய்வதற்கு இந்தியா வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதுதொடா்பாக இந்தியாவின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெள... மேலும் பார்க்க