செய்திகள் :

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

post image

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு 180 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தின் என்ஜின் பகுதிகளை விமானி ஆய்வு செய்தபோது, அதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தாா்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்ததையடுத்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சரிசெய்ய இயலாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனா். இதையடுத்து அனைத்து பயணிகளும் மாற்று விமானங்கள் மூலம் அபுதாபிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது தீ விபத்து: மூவா் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா். வில்லிவாக்கம் சிட்கோ நகா் 48-ஆவது தெருவில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவா் மோகன் (50). இவரது கடைய... மேலும் பார்க்க