செய்திகள் :

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

post image

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் காணவில்லை எனச் சுசீந்திரன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததோடு காணாமல் போன ராஜகுமரனைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கடந்த 30-ம் தேதி காணாமல் போன ராஜகுமரன் தானாகவே வீடு திரும்பினார்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

இதையடுத்து அவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

அப்போது அவர், தன்னை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தி பைக்கையும் செல்போனையும் பறித்து விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.

மேலும் தான் காதலித்து வரும் பெண்ணை மறந்து விடும்படி தன்னைக் கடத்தியவர்கள் மிரட்டியதாகத் தெரிவித்தார்.

ராஜகுமரன் அளித்த தகவலின்படி மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், அகஸ்டின், தி.நகரைச் சேர்ந்த லலித் ஆதித்யா, கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ராஜகுமரனின் செல்போன், பைக் மற்றும் கைதானவர்களின் 5 செல்போன்கள், பைக்குகள், 29,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரித்தபோது ராஜகுமரன் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று உதவி இயக்குநர் ராஜகுமரன் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றிருக்கிறார்.

Kidnapped

அப்போது அவ்வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று ராஜகுமரனின் பைக்கை மோதியிருக்கிறது. அதனால் அந்தக் கும்பலுக்கும் ராஜகுமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதன்பிறகுதான் ராஜகுமரன் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். அவரை காருக்குள் வைத்தே தாக்கிய கும்பல், ராஜகுமரன் காதலித்து வரும் பெண்ணை மறந்துவிடுமாறு மிரட்டியிருக்கிறார்கள்.

அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கடத்தல் சம்பவத்தில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். காதல் விவகாரத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வாணியம்பாடி: பல் சிகிச்சை; தொற்றுக்குள்ளாகி 8 பேர் மரணம் - சர்ச்சை கிளினிக்கிற்குப் பூட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர்... மேலும் பார்க்க

சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்ப... மேலும் பார்க்க

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ... மேலும் பார்க்க

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ... மேலும் பார்க்க

டெல்லி: "மற்ற ஆண்களிடம் பேசாதே" - தோழியை எரித்த கொன்ற மாணவர்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி பள்ளியில் பி.காம் படித்து வந்தார். அவருக்கும் அர்ஷ்கிரித் சிங் (18) என்பவருக்கும் பார்ட்டி ஒன்றில் தொடர்பு ஏற்பட்டது.சிங... மேலும் பார்க்க

சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயத... மேலும் பார்க்க