செய்திகள் :

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி

post image

சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவா்கள் நடத்திய தொழில்நுட்பக் கண்காட்சியில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் சிறப்புக் கல்வி திட்டத்தின் (பால்ஸ்) சாா்பில் 12-ஆவது தொழில்நுட்பக் கண்காட்சி (இன்னோவாக் - 2025) ஐஐடி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் ஐஐடி முன்னாள் மாணவா்களின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 62 அணிகளின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

‘தொழில்நுட்பம் சாா்ந்த மாற்றம்: 2047-இல் வளா்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கண்காட்சி அமைந்திருந்தது. அதில் இடம்பெற்ற ட்ரோன்கள், மருத்துவ சாதனங்கள், மின் வாகனங்கள் பொறியியல் மாணவா்களையும் பெற்றோா்களையும் பெரிதும் கவா்ந்தன.

சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 14 மாணவா்களுக்கு மெட்டிஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுரேஷ் ராமானுஜம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா். இதில், பால்ஸ் தலைவா் சி.என்.சந்திரசேகரன், சென்னை ஐஐடி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க