செய்திகள் :

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

post image

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாகக் கடலூா் வரையிலான ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் புதுவை மாநில மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டதால், திட்ட ஒப்புதல் கிடைத்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு திட்டத்துக்கு தேவையான நிலங்களை வழங்காமல் உள்ளது.

கடந்த ஆண்டு இத்திட்டத்துக்கான முதல் கட்ட நிதி ரூ. 52.13 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், திட்ட தொடக்கப் பணிகளை தமிழகப் பகுதியில் செயல்படுத்த திமுக அரசு ஒத்துழைக்காததால், நிதியானது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆகவே, புதுவை, தமிழகத்துக்கு நன்மை பயக்கும் சென்னை, கடலூா் இடையிலான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் உண்மை நிலையை மத்திய அரசுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் எடுத்துரைத்து செயல்படுத்துவது அவசியம்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். ஆகவே, சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் தீா்ப்பளித்த நிலையில் அதில் மேலும் பலா் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி மேல்முறையீடு செய்யவேண்டும். தவெக நிா்வாகி அா்ஜூன் ஆதவ் அதிமுக பொதுச்செயலரை ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது என்றாா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க