செய்திகள் :

சென்னை: தாயின் செயினைப் பறித்த மகன்; சிசிடிவியால் வெளிவந்த உண்மை; என்ன நடந்தது?

post image

சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).

இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல்சி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை எல்சி திறந்திருக்கிறார். அப்போது மாஸ்க் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், வெளியில் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம், யார் நீங்கள், என்ன வேண்டும் என எல்சி கேட்க, அந்த இளைஞரோ எந்தப் பதிலும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த ஸ்பீரே ஒன்றை எடுத்து எல்சியின் முகத்தில் அடித்திருக்கிறார்.

சிசிடிவி
சிசிடிவி

இதில் எல்சி நிலைதடுமாறியதும் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளைப் பறித்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எல்சி, அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மாஸ்க் அணிந்திருந்த இளைஞரின் உருவம் எல்சியின் மகனான எபினின் உருவத்தோடு ஒத்துப்போனது. இதையடுத்து எபின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.

அதனால் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக அம்மாவின் செயினைப் பறித்ததை எபின் ஒப்புக் கொண்டார்.

பின்னர் 5 சவரன் தங்கச் செயினை போலீஸார் எபினிடமிருந்து மீட்டனர். விசாரணையில் எபின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டபோது அதில் நஷ்டம் அடைந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க அம்மாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

திருட்டு
திருட்டு

பெற்ற மகன், தன்னிடம் செயினைப் பறித்த தகவலையறிந்த எல்சி அதிர்ச்சியடைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் தன் மகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் எனக் காவல்துறையினரிடம் எல்சி கெஞ்சினார்.

அதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருச்செந்தூர்: 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய் கைது; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி. பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற... மேலும் பார்க்க

மும்பை: கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்கப்பட்ட 63 வயது பெண்; தலைமறைவான பார்ட்னருக்கு வலைவீச்சு

மும்பை கோரேகாவ் மோதிலால் நகரில் வசித்து வந்தவர் ராகினி (63). இவர் பிரதாப் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.பிரதாப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றன. முதல் மனைவியை முறைப்படி வ... மேலும் பார்க்க

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதிய... மேலும் பார்க்க

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க