செய்திகள் :

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

post image

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.

சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி புறப்பட்டது. விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு ஓடுபாதையிலேயே கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் உடனே நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானியின் சாமர்த்தியத்தால் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் விமானத்தில் பயணிக்க இருந்த 70 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

நிலைமை சீரானதும் விமானம் தாமதமாக புறப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தாமதத்தால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The departure of a SpiceJet flight from Chennai to Thoothukudi has been delayed due to a technical glitch.

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வருகை

ஈரான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமானநிலையம் வந்தனா். அவா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வரவேற்றாா். தமிழக மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்... மேலும் பார்க்க

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை! அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் ... மேலும் பார்க்க