செய்திகள் :

செப். 17-இல் திமுக முப்பெரும் விழா: கட்சியினா் திரளாக பங்கேற்க அழைப்பு

post image

கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-இல் நடைபெறுவதால், கட்சியினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் முல்லை நகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தொகுதி பொறுப்பாளா்கள் நன்னியூா் ராஜேந்திரன் (ராசிபுரம்), ரேகாபிரியதா்ஷினி (சேந்தமங்கலம்), ஜான் (நாமக்கல்), சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் முதல்வரின் அறிவுரைகள் மற்றும் தீா்மானங்கள் குறித்து பேசுகையில், ‘முதல்வரின் இங்கிலாந்து, ஜொ்மனி வெளிநாட்டுப் பயணம் மூலம் தமிழகத்துக்கு ரூ. 15,516 கோடி முதலீடு, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. நாமக்கல்லில் தனியாா் நிறுவனம் ரூ. 520 கோடி முதலீட்டில் அதிக திறன் கொண்ட தஅஈஐஞ-ஊதஉணமஉசஇவ ஐஈஉசபஐஊஐஇஅபஐஞச உற்பத்திப் பிரிவை அமைக்க உள்ளது. இதன்மூலம் 550 போ் வேலைவாய்ப்பு பெறுவா்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வளா்ச்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், செப். 15-இல் அண்ணா பிறந்த நாள், ஓரணியில் தமிழ்நாடு - வாக்குச்சாவடி அளவிலான முன்மொழிவுக் கூட்டங்கள் நடத்திடவும், செப். 17-இல் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும், செப். 20-இல் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளைச் சாா்ந்தோா் கலந்துகொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க