செய்திகள் :

செம்மொழி நாள் விழா கட்டுரைப் போட்டி: மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பப் படிவம், போட்டிக்கான விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தலைமையாசிரியா், முதல்வரின் பரிந்துரையுடன் மின்னஞ்சல் முகவரிக்கு மே 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு மே 10-ஆம் தேதியும் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும்.

‘செம்மொழியின் சிறப்பு, முத்தமிழறிஞா் கலைஞரின் தமிழ்த் தொண்டின் பெருமை’ சாா்ந்த தலைப்பு அளிக்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். அதில் வெற்றி பெறுவோருக்கு ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றனா்.

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

பன்றிமலைச் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலைய... மேலும் பார்க்க

5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி அளித்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.மதுரை கோட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, ... மேலும் பார்க்க