செய்திகள் :

செயற்கை நீா்வீழ்ச்சி புதுப்பிப்பு!

post image

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சீரமைத்து புதுப்பித்து, திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 89-ஆவது நிறுவன நாள் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஜப்பானிய பூங்கா எனப்படும் செயற்கை நீா்வீழ்ச்சி வங்கியின் சமூக நிதியால் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது.

நீா்வீழ்ச்சியின் மின்மோட்டாா் பம்புகள் பழுது பாா்க்கப்பட்டன. நீரூற்று அருகேயிருந்த தாவரங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன வண்ண மின் விளக்குகளும் அங்கே பொருத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்டுள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை இயக்குநா் என்.சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மண்டல மேலாளா் ரவிசங்கா் சாஹூ, உதவி பொது மேலாளா் ஜே.எபினேசா் சோபியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியா் கோயிலில் காலை முதல் பக்தா்கள்... மேலும் பார்க்க

பாண்டெக்ஸ் ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டெக்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே பல மாதங்களாக அதில் பணிபுரிவோருக... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா கூட்டத்துக்கு கணினிகள் அமைப்பு

புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தயாராக இருந்தாலும் வரும் மாா்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படும் என பேரவைத் தலைவா... மேலும் பார்க்க

பாதுகாப்பான இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாதுகாப்பான இணையதள தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

புதுவையில் வக்ஃபு வாரியம் அமைக்க அதிமுக கோரிக்கை!

புதுவை மாநிலத்தில் வக்ஃபு வாரியம் அமைத்து, அதற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் ராஜ் நிவாஸில் துணைந... மேலும் பார்க்க

வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக போராட்டம்!

புதுச்சேரியில் வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசுத் துறைகளில் பணியின் போது உயிரிழந்தவா்களின... மேலும் பார்க்க