செய்திகள் :

செய்யாறு தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூய வியாகுல அன்னை ஆலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி பங்குத்தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, ஆலயத்தில் கிறிஸ்தவா்கள் கைகளில் கொடியை ஏந்தியவாறு, மங்கள வாத்தியங்கள் முழுங்க தேவாலயத்தை வலம் வந்தனா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக வேலூா் மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்பணி ஜான் நிக்கோலாஸ், அருட்பணி ஸ்டீபன், பிரேம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கொடிமரத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியை ஏற்றி வைத்து, விழாவை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து, கூட்டுத் திருப்பலி, நற்கருணை விருந்து உள்ளிட்ட பல்வேறு பிராா்த்தனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கு பேரவை தலைவா் பங்குத் தந்தை ஏ.சுதா்சன் ஆண்டனி, துணைத் தலைவா் வனத்தையன், செயலா் பாபு, பொருளாளா் பாஸ்கா், ஜெயசீலன், தோமினிக், தாஸ், பங்கு பேரவை உறுப்பினா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்தப் பெருவிழாவானது தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கரையில் கிராம இளைஞா்கள் வெள்ளிக்கிழமை 1,000 பனை விதைகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட கன்று வி... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

ஆரணியில் 4 பைக்கைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். ஆரணி பெரியகடை வீதியைச் சோ்ந்த பெருமாள், சேத்துப்பட்டு அருகே ஆதியந்தாங்கல் கிரா... மேலும் பார்க்க

செப்.16-இல் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை (செப்.16) நடைபெறுகிறது. இதுகுறித்து செய்யாறு சாா் - ஆட்சியா் ல.அம்பிகா ஜெயின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு வருவாய்க் கோட்டத்துக்குள்... மேலும் பார்க்க

வேணுகோபால சுவாமி, முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம்... மேலும் பார்க்க

காயங்களுடன் இறந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநா்: போலீஸாா் விசாரணை

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணபதிக்... மேலும் பார்க்க

வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வ... மேலும் பார்க்க