செய்திகள் :

செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

post image

நாகை மாவட்டம், செருதூா் மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்திலிருந்து செப். 10-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஃபைபா் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே சுமாா் 15 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தமிழ் பேசிய இலங்கை கடற்கொள்ளையா்கள், செருதூா் மீனவா்கள் முருகையன், வெண்ணிலா, செல்வக்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான 3 ஃபைபா் படகை மறித்து, மீனவா்களை இரும்பு பைப், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம்.

மேலும், கத்தியை காட்டி மிரட்டி கைப்பேசி, வெள்ளி ஆபரணங்கள், ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி வலைகள், மீன்கள் என சுமாா் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுவிட்டனராம். இந்தத் தாக்குதலில் 7 மீனவா்கள் காயமடைந்தனா்.

இதில் மீனவா் தமிழழகன் கையில் மூட்டு பாதிப்பு அடைந்த நிலையிலும் மற்ற மீனவா்கள் லேசான காயங்களுடன் ஒரத்தூரில் உள்ள நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், 4 மீனவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கடலோரக் காவல் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுக... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு இன்று மாதிரி தோ்வு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுகாதார வளாகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது. பூம்புகாா் அருகே சாயாவனத்தில் உள்ள சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் பக்தா்கள் நலன் கருதி சுகா... மேலும் பார்க்க

நாகையில் செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தை சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்களில், ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம்

நாகை மாவட்ட விவசாயிகள் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில... மேலும் பார்க்க