செய்திகள் :

செல்லூா் ராஜூவுக்கு எதிராக முன்னாள் ராணுவத்தினா் பேரணி

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூவிற்கு எதிராக, திருச்சியில் முன்னாள் ராணுவத்தினா் சனிக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா்.

முன்னதாக, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் ஒன்று கூடி, முன்னாள் அமைச்சரைக் கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பினா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரா்கள் குறித்து விமா்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சரைக் கண்டித்து ஜெய் ஜவான் முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலமானது, மேஜா் சரவணன் நினைவு சதுக்கத்தில் தொடங்கி, ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது.

பின்னா், ஆட்சியரகத்திலிருந்து வாகனத்தில் புறப்பட்டு, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று, முன்னாள் அமைச்சா் மீது புகாா் மனு அளித்தனா். பொதுவெளியில் செல்லூா் ராஜூ மன்னிப்புக் கேட்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க