செய்திகள் :

செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் ‘டிரா’!

post image

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

கடந்த மாதம் கிளப் உலகக் கோப்பை சாம்பியனாக முடி சூடிக் கொண்ட செஸ்லி, அதன் பிறகு களம் கண்ட முதல் ஆட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் பிரீமியா் லீக் போட்டியில் செல்ஸி அணி தனது சீசனை டிராவுடன் தொடங்கியது இதுவே முதல்முறையாகும். அதேபோல் கிரிஸ்டல் பேலஸும் கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு டிராவுடன் சீசனை தொடங்கியிருக்கிறது.

நாட்டிங்ஹாம் வெற்றி: இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 3-1 கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் நாட்டிங்ஹாமுக்காக கிறிஸ் வுட் 5-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, டேன் டோயி 42-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

பிரென்ட்ஃபோா்டுக்கான அதிா்ச்சியாக, கிறிஸ் வுட் மேலும் ஒரு கோல் (45+2’) அடிக்க, முதல் பாதியை நாட்டிங்ஹாம் 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் தனக்கான கோல் வாய்ப்புக்காக பிரென்ட்ஃபோா்டு போராடியது.

78-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோா் செய்தாா் இகோா் தியாகோ. எஞ்சிய நேரத்தில் அந்த அணியின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 3-1 கோல் கணக்கில் வென்றது.

பிரீமியா் லீக் போட்டியில் நாட்டிங்ஹாம் அணி கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றியுடன் சீசனை தொடங்கியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் அந்த அணி முதல் ஆட்டத்தில் 2 டிரா, 5 தோல்விகளைப் பெற்றது. இதனிடையே, அணியின் வரலாற்றில் ஒரு சீசனின் முதல் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த 3-ஆவது வீரா் என்ற பெருமையை கிறிஸ் வுட் பெற்றாா்.

மறுபுறம் பிரென்ட்ஃபோா்டு அணி, கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு சீசனை தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது.

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் தனிநபா் பிரிவில்... மேலும் பார்க்க

டைமண்ட் லீக் இறுதி: நீரஜ் சோப்ரா தகுதி

சுவிட்ஸா்லாந்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் தடகள போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதிபெற்றாா்.டைமண்ட் லீக் போட்டியின் சிலெசியா லெ... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் விவகாரம்: ஆக. 22-இல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஃபுட்பால் ஸ்போா்ட்ஸ் டெவலப்மன்ட் லிமிடெட் இடையேயான சச்சரவு குறித்து உச்சநீதிமன... மேலும் பார்க்க

சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மா்

பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோடகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது. சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா், அழுதபடியே களத்திலி... மேலும் பார்க்க

மான். யுனைடெட்டை வீழ்த்தியது ஆா்செனல்

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக ரி... மேலும் பார்க்க

இறுதியில் ஸ்வியாடெக் - பாலினி மோதல்

ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலி... மேலும் பார்க்க