செய்திகள் :

செவந்திப்பட்டி ஊராட்சி செயலருக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

post image

நாமக்கல்: செவந்திப்பட்டி ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது செவிந்திப்பட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்த மந்திரி என்பவா் சில மாதங்களுக்கு முன்பு வடவத்தூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா்.

ஊராட்சியின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, பல்வேறு வகையில் நிதி முறைகேடு செய்துள்ளாா் என அவா் மீது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊராட்சி செயலாளா் மந்திரி மீண்டும் செவந்திப்பட்டி ஊராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். இந்த தகவல் அறிந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக செய்தனா்.

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க

5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு

நாமக்கல்: வணிகா் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. ஒவ்வோா் ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கொண்டாடப்படுகிறது.... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அன்னதானம்: பி.தங்கமணி

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, மே 12-இல் மாவட்டம் முழுவதும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். நா... மேலும் பார்க்க