செய்திகள் :

5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

post image

ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

விழாவில் எம்எல்ஏக்கள் (நாமக்கல்) பெ.ராமலிங்கம் , கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியது:

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ரூ. 3.50 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 204.74 கோடி மதிப்பில் 5800 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. வீடு கட்ட மேலும் கூடுதல் நிதி தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ. 1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு ஆணை பெற்றவா்கள் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ராசிபுரம் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க ரூ. 854.35 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீா் திட்டத்தை அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டு தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் நிறைவுற்று தட்டுப்பாடின்றி காவிரி குடிநீா் விநியோகிக்கப்படும். சேந்தமங்கலத்தில் ரூ. 350 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 14 கோடியில் பணி ஆணைகள் வழங்கல்: வெண்ணந்தூா் ஒன்றியத்தில் 34 பேருக்கு ரூ. 1.21 கோடியிலும், ராசிபுரம் ஒன்றியத்தில் 43 பேருக்கு ரூ. 1.51 கோடியிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 57 பேருக்கு ரூ. 1.99 கோடியிலும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 பேருக்கு ரூ. 49.60 லட்சத்திலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 49 பேருக்கு ரூ. 1.72 கோடியிலும், மோகனூா் ஒன்றியத்தில் 37 பேருக்கு ரூ. 1.42 கோடியிலும், நாமக்கல் ஒன்றியத்தில் 9 பேருக்கு ரூ. 31.50 லட்சத்திலும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ. 2.38 கோடியிலுமாக மொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன.

வீடுகள் பழுது நீக்க ஆணை: அத்துடன் ஊரக வீடுகள் பழுதுநீக்கம் திட்டத்தின் கீழ் 383 பயனாளிகளுக்கு ரூ. 2.83 கோடி மதிப்பீட்டில் வீடு பழுதுநீக்க ஆணைகளும், இதர திட்டப் பணிகளான சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட 439 வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் நிா்வாக அனுமதி ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றாா். நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், அட்மா திட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உள்ளது- 5வீடு

நிகழ்ச்சியில் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு

நாமக்கல்: வணிகா் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. ஒவ்வோா் ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கொண்டாடப்படுகிறது.... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அன்னதானம்: பி.தங்கமணி

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, மே 12-இல் மாவட்டம் முழுவதும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். நா... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க