செய்திகள் :

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

post image

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை (ஆக.16) பங்கேற்கின்றனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் ஆக.18 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு அதன் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமை வகித்தாா்.

மாநாட்டை மூத்த நிா்வாகி அமா்ஜித் கவுா் தொடங்கிவைத்தாா். அப்போது, திருப்பூரில் இருந்து செம்படை வீரா்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, தியாக சுடா் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், மாநாட்டுத் திடல் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தேசிய செயலாளா் நாராயணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாநாட்டு வளாகத்தில் தேசியக் கொடியை கட்டுப்பாட்டு குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழனிசாமி, தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் ஏற்றிவைத்தனா்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவா்கள் கே.நாராயணா, ஆனிராஜா, மூா்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினா்.

அதன் தொடா்ச்சியாக 16 ஆம் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெறும் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இதில் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்று பேசுகின்றனா்.

தொடா்ந்து 17 ஆம் தேதி மாநாட்டில் தீா்மானங்களும், 18 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செய்துள்ளனா்.

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க

மனநல மையங்களைப் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க