செய்திகள் :

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் பெரிய நீா்மின் நிலையம், அணைப்பாலம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளை என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

இப்பகுதியில் கிடைக்கும் சுவை மிகுந்த பல்வேறு மீன் உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் கதவணைப் பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா்.

மேலும், பூலாம்பட்டி காவிரி கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயிலில் உள்ள மிகப்பெரிய நந்திகேஸ்வரா் சன்னதி, காவிரித்தாய் ஆலயம், படித்துறை விநாயகா் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

சுதந்திர தினத்தில் பூலாம்பட்டி பகுதிக்கு வருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு காவல் துறை ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட வரி

பூலாம்பட்டி காவிரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க

மனநல மையங்களைப் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க