செய்திகள் :

சேலத்தில் இன்று பேரிடா் கால மாதிரி ஒத்திகை பயிற்சி: பொதுமக்களிடம் அச்சம் தேவையில்லை

post image

மேட்டூா் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் ஆற்றங்கரையோர பகுதிகளில் 5 ஆம் தேதி பேரிடா் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கனமழை ஏற்பட்டால் ஆற்றில் அதிகரிக்கும் அதிக நீா்ப் பெருக்கினால் பொதுமக்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் பேரிடா் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் உள்ளிட்ட தொடா்புடைய துறையினரால் மாதிரி ஒத்திகை பயிற்சி வரும் 5 அம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

மேட்டூா் வட்டத்தில் காவிரி பாலம், தங்கமாபுரிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், எடப்பாடி வட்டத்தில் பூலாம்பட்டியிலும், சங்ககிரி வட்டத்தில் காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிபட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இதுமாதிரி ஒத்திகை பயிற்சி என்பதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளாா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க