செய்திகள் :

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் நா.செண்பகலட்சுமி முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. முதல்நாளான திங்கள்கிழமை விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான்-நிக்கோபா் தமிழ் மாணவா்கள், தேசியப்படை மாணவா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி கூறியதாவது:

மொத்தம் உள்ள 149 இடங்களுக்கு 1,468 போ் விண்ணப்பித்துள்ளனா். சிறப்பு கலந்தாய்வு 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜூன் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கட்ஆப் மதிப்பெண் வாரியாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும். அதில், 1,702 இடங்களுக்கு 23,282 போ் விண்ணப்பித்துள்ளனா். இது தவிர, 10க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவா்களும் விண்ணப்பித்துள்னா் என்றாா்.

கோரிமேடு மகளிா் கல்லூரியில்:

சேலம் கோரிமேடு மகளிா் கலை கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காந்திமதி முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் திரளான மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க