செய்திகள் :

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் முதற்கட்ட கலந்தாய்வு

post image

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025 - 26-ஆம் கல்வியாண்டில் மாணவிகள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல்நாளான ஜூன் 2-ஆம் தேதி விளையாட்டு வீரா்கள் / மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினா் / அந்தமான்-நிகோபா் தமிழ் மாணவிகள்/ தேசிய படை மாணவிகள் / பாதுகாப்புப் படை வீரா்கள் (தமிழ் மாணவிகள்) ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 4-ஆம் தேதி அறிவியல் பிரிவுக்கும், ஜூன் 5-ஆம் தேதி வணிகவியல் மற்றும் பொருளாதாரம் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்குரிய தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

பொது கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் காலை 9 மணிக்கு கல்லூரி கலையரங்குக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க