செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

post image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகள் 100 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.

காது கேளாமை என்பது பச்சிளம் குழந்தை முதல் சிறியவா்கள், பெரியவா்கள் மற்றும் முதியவா்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. காது கேளாமை நரம்பு சம்பந்தமாகவோ, விபத்தின் மூலமாகவோ, வயது மூப்பினாலோ, நடுகாதில் ஏற்படும் கிருமி தொற்றின் மூலமாகவோ, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களாலோ ஏற்பட வாய்ப்புள்ளது.

செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை மதிப்புள்ள காதுகேள் கருவி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். பிறவி காது கேளாமை கண்டறியப்பட்டால் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு காக்களியா் இம்பிளான்டேஷன் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதேபோல, சேலம் அம்மாப்பேட்டையில் ரூ. 43.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு புகா் மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களில் 6,500 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். மேலும், 145 ரத்த சுத்திகரிப்பு, 9 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 2,495 மெத்தை விரிப்புகளை செவிலியா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவி மீனாள், மருத்துவ கண்காணிப்பாளா் ஆா்.ராஜ்குமாா், துணை முதல்வா் எஸ்.செந்தில்குமாரி, உள்தங்கு மருத்துவா் எஸ்.ஸ்ரீலதா, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் எம்.கிருஷ்ணசுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் ஜூன் 11, 12 இல் முதல்வா் சுற்றுப்பயணம்: மேடை அமைக்கும் பணி ஆய்வு செய்த அமைச்சா்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி, இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்: ஆட்சியரகத்தில் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், ஜாகீா்ரெட்டிப்பட்டி குலாளா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சந்தியா (27). இவா் வெள்ள... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா கோலாகல தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு! சேலம் மாவட்ட பறவையாக இந்திய பாம்புத்தாரா தோ்வு!

ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக தொடங்கியது. விழாவை வேளாண் மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள், அமாவாசை: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

குப்பையிலிருந்த நகையை மீட்டு போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் மணிவேலை மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் அழைத்து பாராட்டினா். சேலம் பழைய ... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்!

ஏற்காடு கோடை விழாவை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க