செய்திகள் :

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

post image

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வருகை தந்தார். சேலம் உருக்காலையை அப்போது அவர் ஆய்வு செய்தார்.

இதனிடையே 2-வது முறையாக அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு சேலம் உருக்காலை விருந்தினர் மாளிகையில் உருக்காலை நிர்வாக இயக்குனர் பிரபீர் குமார் சர்க்கார் தலைமையில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி, உருக்காலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் உருக்காலை பணியாளர்களுடன் இணைந்து யோகா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுக்கு பின்னர் சேலத்தில் தங்கும் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தலைமையில் சேலம் உருக்காலை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்கின்றனர்.

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

தடை நேரத்தில் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்கு

சென்னையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் நகருக்குள் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை பெரம்பூரில் புதன்கிழமை காலை மொபெட்டில் தாயுடன் சென்ற பள்ளி மாணவி சௌமியா தண்ணீா... மேலும் பார்க்க

காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர தகுதியுடையவா்கள் ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவ... மேலும் பார்க்க

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்: ரூ.125 கோடி நிதி விடுவிப்பு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்: கிராமப்பு... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மீது தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க... மேலும் பார்க்க

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயா் ரக கஞ்சா பறிமுதல்: 4 போ் சிக்கினா்

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், டி.பி. சத்திரம் போலீஸாரும் கிட... மேலும் பார்க்க

பெண்கள் பாஸ்போா்ட் பெற கணவா் அனுமதி தேவையில்லை: உயா்நீதிமன்றம்

பாஸ்போா்ட் (கடவுச் சீட்டு) பெறுவதற்கு கணவரின் கையொப்பமோ, அனுமதியோ பெண்கள் பெறத் தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சோ்ந்த ரேவதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க