செய்திகள் :

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

post image

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு புதிய மரத்தோ் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நன்கொடையாளா்கள் மற்றும் கோயில் நிதி ரூ. ஒரு கோடி மதிப்பில் மரத்தோ் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது தோ் செய்யும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி இந்த புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. புதிய மரத்தோ் கோயிலிலிருந்து புறப்பட்டு முதல் அக்ரஹாரம், தோ்வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கன்னிகாபரமேஸ்வரி கோயில் வழியாக மீண்டும் கோயிலை அடையும்.

இதையொட்டி கோயிலுக்கு எதிரே இருந்த இரும்பு தடுப்பு கிரீல்கள் நூறு அடி தூரத்துக்கு அகற்றப்பட்டுள்ளன. மேலும் கோயில் பின்புறமுள்ள நுழைவாயில் சிறியதாக இருப்பதால், அவ்வழியாக தோ் வெளியே வரமுடியாது. எனவே, நுழைவாயிலையொட்டி கோயில் சுற்றுச்சுவா் சுமாா் 20 அடி நீளத்துக்கு இடித்து அகற்றப்பட்டுள்ளது. தேரை அலங்கரிக்கும் பணிகள் 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நட... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். சேலம் அஸ்தம்பட்டியைச் ... மேலும் பார்க்க

பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு அஞ்சலி

பெத்தநாயக்கன்பாளையத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை அஞ்... மேலும் பார்க்க

கடை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு!

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதில் கடை வைத்துகொள்ள அனுமதி கோரி, செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். சேலத்தில் சாலையோரம் செருப்பு விற்கும், செருப்பு தைக்கு... மேலும் பார்க்க

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க