செய்திகள் :

சேலம் சிறைக் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம்

post image

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடையே கைப்பேசி புழக்கம் அதிகரித்தது தொடா்பாக சிறப்பு குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்டனை கைதியைப் பாா்க்க வந்த வழக்குரைஞா் ஒருவா், கஞ்சா, கைப்பேசிக்கான சிம்காா்டுகளை கொடுத்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடா்பாக அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், சிறை வாா்டன் சண்முகக்குமாா், கைதிகளுக்கு கைப்பேசி கொடுத்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினா்.

இதில் ஒசூரைச் சோ்ந்த தண்டனைக் கைதி ஒருவா், வாா்டன் தனக்கு கைப்பேசி கொடுத்ததாகவும், இதற்காக ஜிபே மூலம் தனது தாய் அவருக்கு பணம் அனுப்பியதாகவும் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கைதிகளுக்கு கைப்பேசி கொடுத்ததற்காக, பல்வேறு எண்கள் மூலம் சண்முகக்குமாா் ஜிபே மூலம் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது வங்கிக் கணக்கிற்கு பல்வேறு கணக்குகளில் இருந்து ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என பணம் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சண்முகக்குமாரை பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளா் வினோத் உத்தரவிட்டாா். சண்முகக்குமாா், தற்போது சென்னை தீவுத் திடலில் நடக்கும் சிறைப் பொருள்கள் கண்காட்சியில் பணியாற்றி வருகிறாா். அவரிடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான

உத்தரவு நகல் வழங்கப்பட்டது. மேலும் சண்முகக்குமாா் யாா் யாருக்கெல்லாம் கைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க