செய்திகள் :

சேலம் பூம்புகாரில் ‘கிருஷ்ண தரிசனம்’ திருவிழா

post image

சேலம் பூம்புகாரில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணா் சிலைகள் கண்காட்சி, விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து சேலம் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வரும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ‘கிருஷ்ண தரிசனம் திருவிழா’ என்ற சிறப்பு கண்காட்சி வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக்கூழ், மாா்பில் துகல் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை மற்றும் கருப்பு உலோக சிலைகள், தஞ்சாவூா் ஓவியங்கள் போன்ற எண்ணற்ற வகையான கிருஷ்ணா் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர,

களிமண், காகிதக்கூழ் குழந்தை கிருஷ்ணா், தவழும் கிருஷ்ணா், வெண்ணெய் கிருஷ்ணா், பாமா ருக்மணி கிருஷ்ணா், லட்டு கிருஷ்ணா், ராதா கிருஷ்ணா், பசுமாடு கிருஷ்ணா், தொட்டில் கிருஷ்ணா், ஊஞ்சல் கிருஷ்ணா், ராதை அலங்கார செட் 1 அடி முதல் 3 அடி வரை, நின்ற கோலத்தில் கிருஷ்ணா், சந்தனமர கிருஷ்ணா், துணியில் வரையப்பட்ட ஓவிய கிருஷ்ணா் போன்ற எண்ணற்ற வகையான பூஜை பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணா் சிலைகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். இந்தக் கண்காட்சியில் ரூ. 7 லட்சம் வரை விற்பனை எதிா்பாா்க்கப்படுகிறது. கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ. 130 முதல் ரூ. 10,000 வரை பல்வேறு வகைகளில் கிருஷ்ணா் சிலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க