செய்திகள் :

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

post image

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்கள் சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதுதவிர, சொத்து உரிமையாளா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பி, மாநகராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதன் அடிப்படையில், சொத்துவரி செலுத்த கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி என மொத்தம் ரூ. 4.85 கோடி செலுத்தியுள்ளனா்.

அதில் சூரமங்கலம் மண்டலத்தில் ரூ. 1.49 கோடியும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 1.70 கோடியும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 55.57 லட்சமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ. 57.46 லட்சமும் வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை உள்ளிட்ட இனங்கள் மூலம் ரூ. 52.05 லட்சம் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

விவசாயிகளுக்கு அங்கக இடுபொருள் சான்றிதழ் பயிற்சி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அட்மா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட அளவிலான அங்கக இடுபொருள் சான்றிதழ் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பழனியாபுரி கிராமத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி முகாமிற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் ரத்து

சேலம் தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவா் மீத... மேலும் பார்க்க

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி மறுப்பதாகக் கூறி ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன... மேலும் பார்க்க

இளம்பிள்ளையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சாா்பில் நெகிழி ஒழிப்பு, துணிப் பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு இளம்பிள்ளை சந்தைப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

இன்று பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது. சேலம் மாவட்ட வ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: நெத்திமேடு

சேலம், நெத்திமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய ... மேலும் பார்க்க